Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மினி மராத்தான் போட்டி ஆவின்பால் தலைவர் வேலஞ்சேரி சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் சென்னை வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் உட்பட 600 நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கேஜி கண்டிகையில் இருந்து திருத்தணி வரை சுமார் 15 கிலோமீட்டர் ஓடினார்கள் இதில் ஓடுபவர்களுக்கு களைப்பாற தண்ணீர் மோர் போன்ற நீராகாரங்கள் வழங்கப்பட்டது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 9 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.